×

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை அதிகரித்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தர்மபுரியை சேர்ந்தவர் மைதிலி. இவரது கணவர் குமார் கடந்த 2016 ஏப்ரல் 3ம் தேதி நடந்த பஸ் விபத்தில் இறந்தார். இதையடுத்து, ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு குமாரின் மனைவி மைதிலி தர்மபுரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அத்தீர்ப்பாயம், 83 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை, விசாரித்து, கீழ்கோர்ட் வழங்கிய இழப்பீடு குறைவாக உள்ளது. எனவே கணவனை இழந்த மனைவிக்கு ஒரு கோடியே 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

The post விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை அதிகரித்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maithili ,Dharmapuri ,Kumar ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்